ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக சமாதான கூட்டம் காவல்துறையினர் குவிப்பு.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக சமாதான கூட்டம் காவல்துறையினர் குவிப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்தகோரிய வழக்கின் உத்தரவில் அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த உத்தரவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோட்டாச்சியர் தலைமையில் சமாதான கூட்டம் தொடங்கவுள்ளது.
சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்களும் இணைந்து நடத்தவும், கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
சமாதான கூட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்து அனுப்பிவைத்துவருகின்றனர்.
Tags :