திருமண மண்டபத்தில் மதுவுக்கு அனுமதியில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

by Staff / 24-04-2023 01:22:33pm
திருமண மண்டபத்தில் மதுவுக்கு அனுமதியில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம். இதற்காக சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ,இந்நிலையில், திருமண மண்டபங்களில் ஒருபோதும் மது அருந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சர்வதேச விளையாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் போன்ற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via