விஏஓ கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!

by Editor / 26-04-2023 08:10:59pm
விஏஓ கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!

தூத்துக்குடி: சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ், முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று மர்ம நபர்கள் இருவர் லூர்து பிரான்சிஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணல் கடத்தலைத் தடுத்ததால், லூர்து பிரான்சிஸை, ராமசுப்பிரமணியம், மாரி ஆகியோர் படுகொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய ராமசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான மாரியை இன்று திருநெல்வேலி தாழையூத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via