கரடி தாக்கி ஒருவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 26-04-2023 04:51:37pm
கரடி தாக்கி ஒருவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சிபாறை லோயர் டிவிஷனை சேர்ந்த ஐயப்பன் வயது 56 என்பவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் களை மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார். இன்று நண்பகல் 12.30 மணியளவில் கரடி ஒன்று மருந்து அடித்து கொண்டிருந்த ஐயப்பணை திடீரென கரடி தாக்கி உள்ளது. தகவல் அறிந்து வந்த வணத்துறையினர் பார்வையிட்டு இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை அருகில் இருந்த தொழிலாளர்கள் உதவி யுடன் வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via