இடிந்து விழுந்த சுவர்.. நால்வர் பலி

by Staff / 21-04-2024 12:26:22pm
இடிந்து விழுந்த சுவர்.. நால்வர் பலி

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை நடந்தது. திடீரென மின் மயானத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், மைனர் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மயான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மயானத்தில் வெளிப்புறத்தில் அமர்ந்து சிலர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via