ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்துவதை தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தவும் அணையிட்டுள்ளது. மேலும், மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :