தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் மூடல்

by Editor / 06-04-2022 08:54:49am
தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் மூடல்

இந்தியாவில் தீப்பெட்டி மூலப்பொருட்களின்  விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வரும் 17ஆம் தேதி வரை அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மற்றும் அதன் சார்புத் தொழில்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும்  2000க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் என அனைத்து ஆலைகளும் மூடப்படுகின்றன.  நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாயை உற்பத்தி பாதிக்கப்படுங மட்டுமன்றி, ‌ 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via