18 வயது இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை

by Staff / 14-12-2023 12:22:17pm
18 வயது இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை

பஞ்சாபில் 18 வயது இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். ஜலந்தரில் உள்ள பஸ்தி பவாகெல்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்தனர். குற்றவாளிகள் குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via