சுற்றுலா பயணிகளை துரத்திய புலி.
வனப்பகுதிக்குள் சஃபாரி சுற்றுலா சென்ற பயணிகளை புலி துரத்தி பீதியில் உறைய வைத்தது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிற்கு பயணம் செய்த குழுவினர் வனத்தில் இருந்து வெளியே வந்த புலி ஒன்று ஆக்கிரோஷமாக துரத்தியது. அதே குழுவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். புதரில் இருந்த புலி வாகனத்தை நோக்கி பாய்ந்து வந்து அச்சுறுத்தியது. இது உண்மையிலேயே அதிர்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :