புதுச்சேரியில் கடலில் மூழ்கி வாலிபர் பலி

by Staff / 29-04-2023 04:59:09pm
புதுச்சேரியில் கடலில் மூழ்கி வாலிபர் பலி

புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி ருக்குமணி. தம்பதிக்கு கோகுல், அசோக்குமார் என்ற 2 மகன்கள் இருந்தனர். பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார்.இதில் அசோக்குமார் சற்று மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தார். அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்தார்.இந்த நிலையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்ற அசோக்குமார் நீன்ட நேரமாகியும் திரும்பி வராததால் முருகானந்தமும் அவரது மருமகன் சபரிநாதனும் அங்கு சென்றனர்.கடற்கரையில் அசோக்குமார் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தை கண்ட அவர்கள் அரியாங்குப்பம் போலீஸ் நிலைத்தில் தனது மகன் நீச்சல் தெரியாமல் இறந்திருக்கலாம் என்று புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via