குடிநீர் தொட்டி ஆபரேட்டர் தலை நசுங்கி பலி
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதகடிப்பட்டு சந்தைதோப்பு எதிரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :