கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுவெளியீடு-அழுத கல்வி அமைச்சர். 

by Editor / 20-05-2023 08:56:12am
கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுவெளியீடு-அழுத கல்வி அமைச்சர். 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள அட்டிங்கல்லில் மே 6 ஆம் தேதி நடந்த விபத்தில் அட்டிங்கல் ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் பி.ஆர்.சாரங் படுகாயமடைந்தார்.அவரது பெற்றோர் பினீஷ் குமார்-ரஜனிதம்பதியினர் உடன் வாகனத்தில் சென்றபோது நடந்த இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணம்  அடைந்தார்.இந்த மாணவன் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியான நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்து மரணமடைந்த மாணவன்  பி.ஆர்.சாரங்  ஏ பிளஸ் கிரேடு பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த மாணவன் விபத்தில் காயமடைந்து தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவர் சாரங்கின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் சிவன்குட்டி கண்ணீரை அடக்க முடியவில்லை.
சாரங் எல்லாப் பாடங்களிலும் உயர்தர A+ பெற்றிருப்பதை வெளிப்படுத்திய சிவன்குட்டி தேர்வு முடிவை அறிவிப்பை வெளியிட்டபோது அவரது குரல் நடுங்கியது.மாணவன் சாரங் உடலின் 12 பாகங்கள் 12 பேருக்கு பொருத்தப்படுகிறது, சிறுவனின் உடலுக்கு  மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், இந்த சமானம் கேரளாமாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via