70 ஏக்கர் கண்மாய்க்குள் 40 வருடங்களாக வளர்த்த 7000  தென்னை மரங்களை அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்.

by Editor / 28-07-2024 12:12:31am
 70 ஏக்கர் கண்மாய்க்குள் 40 வருடங்களாக வளர்த்த 7000  தென்னை மரங்களை அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல்  கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் ஒன்று அமைந்துள்ளது, இந்த கிராமத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 40 வருடங்களாக  பட்டாயின்றி, இந்த கண்மாய்க்குள் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில்  சுமார் 7000 தென்னை மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்கள், ஆனால் 40 வருடங்களாக பொதுப்பணித்துறை நிர்வாகம் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது,
   
 இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது, வழக்கு தொடர்ந்தவர்கள் மறுபடியும் நீதிமன்றத்தில்  அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் 15 நாளுக்குள் மறுபடியும்  அகற்ற வேண்டும் என்று மதுரை  உயர்நீதிமன்ற  உத்தரவிட்டது,

 இதன் அடிப்படையில் கடந்த  மூன்று மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருப்புவனம் வட்டாட்சியர் காவல்துறையினர்  உட்பட அனைவரும்  சென்று சுமார் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அகற்றினார்கள்,

 தகவல் அறிந்த வந்த விவசாயிகள் இதை அகற்ற விடமால் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர், மேலும் சென்னை கிளை மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறினார்கள்,
இதனைத் தொடர்ந்து மறுபடியும் அந்த வழக்கு‌ மீண்டும் விசாரணைக்கு வந்தது,   அதில் பாரபட்சம் இன்றி  ஆக்கிரமிப்புகளில் இருக்கும் தென்னை மரங்களை அகற்ற வேண்டும் என்று  மறுபடியும் உத்தரவு பிறப்பித்தது,

 இதன் அடிப்படையில் , திருப்புவனம் தாசில்தார் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்பில் தற்போது தென்னை மரங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, தற்போது வரை சுமார் 400 தென்னை மரங்களை அகற்றியுள்ளனர், மீதமுள்ள தென்னை மரங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து தென்னை மரங்களை அகற்றிவிட்டு கண்மாய் தூர்வாரப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..

பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் விவசாயிகள் கண்முன்னே வெட்டி சாய்க்கப்பட்டது, ,40 வருடங்களாக சோறு போட்ட தென்னை மரத்தை விவசாயிகள்  வியாபாரிகளுக்கு சோகத்துடன் வண்டியில் ஏற்றி வைத்தனர்...

 

Tags :  70 ஏக்கர் கண்மாய்க்குள் 40 வருடங்களாக வளர்த்து 7000  தென்னை மரங்களை, அதிரடியாக அகற்றியஅதிகாரிகள்.

Share via