கஞ்சா விற்ற வாலிபர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் ராஜசேகர்(வயது25). இவர் மதுக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்ற ராஜசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags :