31–ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

by Editor / 17-07-2021 04:51:49pm
31–ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு



இம்மாதம் 31 ந் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைக்‌ குறைக்கத்‌ தேவையான கட்டுப்பாடுகளை 31.7.2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்‌, 25.3.2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில்‌ இருந்து வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள தளர்வுகளுடன்‌ கூடிய ஊரடங்கு 19.7.2021 அன்று காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, மாநிலத்தின்‌ கொரோனா நோய்த்‌ தொற்று நிலையைக்‌ கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31.7.2021 காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
* மாநிலங்களுக்கிடையே தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

* மத்திய உள்துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்‌ தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

* திரையரங்குகள்‌

* அனைத்து மதுக்கூடங்கள்‌

* நீச்சல்‌ குளங்கள்‌

* பொது மக்கள்‌ கலந்து கொள்ளும்‌ சமுதாயம்‌, அரசியல்‌ சார்ந்த கூட்டங்கள்‌

* பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்‌

* பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌

* உயிரியல்‌ பூங்காக்கள்‌

திருமணத்தில் 50 பேர்

* நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்தும்‌ விதமாக திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌.

* இறுதிச்‌ சடங்குகளில்‌, 20 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌.

நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர, அனைத்து பகுதிகளிலும்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

* தொழிற்‌ பயிற்சி பெறும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்பினைக்‌ கருத்தில்‌ கொண்டு அனைத்து தொழிற்‌ பயிற்சி நிலையங்கள்‌, தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித மாணவர்களுடன்‌, சுழற்சி முறையில்‌ கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

* மேலும்‌, பள்ளிகளில்‌, மாணவர்கள்‌ சேர்க்கை, புத்தக விநியோகம்‌, பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்‌ பணிகளும்‌ தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள்‌ பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்‌.

அனுமதிக்கப்பட்டுள்‌ள அனைத்து கடைகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கூடக்கூடிய இடங்களில்‌ பின்வரும்‌ முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌.

* கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்௧ள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌
* கடைகளில்‌ பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
* குளிர்‌ சாதன வசதி பயன்படுத்தப்ப டும்‌ இடங்களில்‌ கதவுகள்‌, ஜன்னல்கள்‌ திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன்‌ செயல்படுவதோடு, கடைகளில்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
* கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌ பொது மக்கள்‌ வரிசையில்‌ காத்திருக்கும்‌ போது, ஒரு நபருக்கும்‌ மற்றொரு வருக்கும்‌ இடையே போதுமான இடைவெளி இருக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ போடப்பட வேண்டும்‌.
* நோய்த்‌ தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல்‌, நோய்த்‌ தொற்றுக்குள்ளானவர்களுடன்‌ தொடர்பில்‌ இருந்தவர்களை கண்டறிதல்‌, சிகிச்சை அளித்தல்‌, தடுப்பூசி செலுத்துதல்‌ மற்றும்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல்‌ ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்‌.
* கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்கு, நோய்த்‌ தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள்‌ உள்ள பகுதிகளில்‌, நோய்க்‌ கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்‌ தடுப்பு நடவடிக்கை களை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. வரையறுக்கப்பட்ட நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, பின்வரும்‌ நோய்க்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
* நோய்க்‌ கட்டுப்பாட்டுப்‌ பகுதிகளில்‌ அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்பட வேண்டும்‌. இந்த நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, மருத்துவ அவசர சேவைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குதல்‌ தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
* நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, நோய்த்‌ தொற்று பரவலை கண்காணிக்க, குழுக்கள்‌ அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்‌.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள்‌ கண்டிப்பாகப்‌ பின்பற்ற வேண்டும்‌.
கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.
மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌ பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
கொரோனா நோய்த்‌ தொற்று தடுப்பு மேலாண்மைக்கான விதிமுறைகள்‌ குறித்த தொடர்‌ விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும்‌ அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர்‌ ஏற்படுத்தவும்‌, அவைகள்‌ கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து விதிமீறல்களில்‌ ஈடுபடுவர்கள்‌ மீது அபராதம்‌ விதிக்கவும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளவேண்டும்‌.
பொதுமக்கள்‌ தொடர்ந்து அரசின்‌ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டுமென கனிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via