பைக் மோதி பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம், ரயில்வே காலனியை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி முத்துச்செல்வி (47), இவர் நேற்று காயல்பட்டணம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு பைக் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்து செல்வி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :