சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். கிஷ்தர்வ் என்ற இடத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தக்தூர் மின் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தின் போது வாகனத்தில் 10 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :