110 லிட்டர் பறிமுதல் சாராயம் விற்றவர் கைது
மணல்மேடு பகுதியில் சாராயம் விற்பனை குறித்து மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் காளி கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காளி கடைத்தெருவில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேல பனையூரை சேர்ந்த நாகராஜ் (வயது 66) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மணல்மேடு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர் குறித்து பொதுமக்கள் 9626169492 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tags :