ட்ரோன்  கேமிரா உதவியுடன் கள்ளசாராயம் வேட்டை தடுப்பு  பணியில் போலீசார்.

by Editor / 27-05-2023 11:08:42am
 ட்ரோன்  கேமிரா உதவியுடன் கள்ளசாராயம் வேட்டை தடுப்பு  பணியில் போலீசார்.


 ட்ரோன்  கேமிரா உதவியுடன் கள்ளசாராயம் வேட்டை தடுப்பு  பணியில் 30க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலை கும்பம் மலைபகுதியில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையிலான 30க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர்கள் மலை பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சப்படுகிறதா என ட்ரோன்  கேமிரா உதவியுடன் ரோந்துபணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் மறைமுகமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியான நிலையில் இன்று சென்னை வடக்கு மண்டல அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்;

 

Tags :

Share via