நீதிக்காக போராட்டம்.. உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், உலக மல்யுத்த கூட்டமைப்பு, “நீதிக்காக போராடும் மல்யுத்த வீராங்கனைகளை, அரசு நடத்தும் விதம், அவர்களை கைது செய்வது உள்ளிட்டவை கடும் கண்டனத்திற்குரியது. பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன (WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டில், இதுவரை சரியான விசாரணை நடத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளது.
Tags :