சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு 10 ஆயிரம் 

by Editor / 16-07-2023 10:29:45pm
சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு 10 ஆயிரம் 

சாலையில் வாகன விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவி செய்வோர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு வழங்கும் ரூ.5000 பணத்துடன் மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றி இருந்தாலும் அனைவருக்கும் ரூ.5000 வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via