“எனக்கு என்ன தெரியும், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 19) கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டது. அமலாக்கத்துறை ஏற்கனவே வந்திருக்க வேண்டும். தற்போது காலதாமதமாக வந்திருக்கிறது" என்றார். மேலும், அவரிடம் டாஸ்மாக் மதுபான விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு, “எனக்கு என்ன தெரியும், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை விலை பற்றி தனக்கு தெரியாது என்றும், விலை உயர்வு பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும்” என கூறினார்.
Tags :