ரூ.1000 உரிமைத் தொகை முகாமை முதல்வர் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம் தொப்பூரில், தொடங்கி வைத்தார். விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளான பெண்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கடவுளை நேரில் பார்த்து வரம் வாங்கியது போல் இருப்பதாக முதல்வரிடம் பேசிய பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முகாமில் ஆதார், ரேஷன் அட்டை விவரங்களுடன் விண்ணப்பப் பதிவு செய்யப்படுகிறது.
Tags : ரூ.1000 உரிமைத் தொகை