இரண்டு மசூதிகள் மீது தாக்குதல்

by Staff / 03-08-2023 12:35:50pm
இரண்டு மசூதிகள் மீது தாக்குதல்

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் மட்டுமின்றி டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், நுஹ் மாவட்டத்தில் உள்ள டாரு பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via