மும்பை ரயிலில் திமிங்கலம் எச்சத்தை கடத்த முயற்சி 6 பேர் கைது

by Editor / 22-07-2022 04:41:31pm
மும்பை ரயிலில் திமிங்கலம் எச்சத்தை கடத்த முயற்சி 6 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் கடத்த முயன்ற இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரிடம் உடைமையை சோதனை செய்ததில் 2 கிலோ எடை கொண்ட திமிங்கலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தினகரன் என்ற அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவன் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via