லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது
கோவை மாவட்டம் சிங்காநல்லூர், பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக, லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுவதாக சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், கார்த்திகேயபாண்டியன், தலைமையில் போலீசார் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினர்,அப்பொழுது அங்கு, அதே பகுதியை சேர்ந்த, 54 வயதான, செல்வராஜ் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 24 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தும், பணம், 5, 560 ரூபாயை பறிமுதல் செய்தும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Tags :