ஆகஸ்ட் 5 வரை இணைய சேவை நிறுத்தம்

by Staff / 03-08-2023 12:47:13pm
ஆகஸ்ட் 5 வரை இணைய சேவை நிறுத்தம்

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில்  இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. இதில் இதுவரை 2 ஊர்காவலப்படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இரு பிரிவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, நுஹ், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via