13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

by Staff / 10-08-2023 12:40:05pm
13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றின் வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 13 இடங்களில் நடைபெற்று வருகிறது. ரூ.225 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக இந்த நிறுவனம் மீது ஏற்கெனவே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்காக பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் வால்டர் என்ற நபருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

 

Tags :

Share via