எய்ம்ஸ் தாமதம் திமுகவே காரணம் - நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மதிப்பீடு 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக உயர்ந்துள்ளது. நில ஆக்கிரமிப்பை தாமதப்படுத்தியதன் காரணமாகவே 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக அதன் மதிப்பு உயர்ந்திருக்கிறது. எனவே, இந்த பணி தாமதமானதற்கான பழியை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசு மேல் சுமத்த கூடாது'' என்றார். மதுரை எய்ம்ஸ் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறுவதாக திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Tags :