ஆடி கிருத்திகை: பழனியில் அலைமோதிய பக்தர்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு மலைக்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். பெண்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தீபங்கள் ஏற்றியும், படிபாதைகளில் உள்ள படிகளில் சூடம் ஏற்றி கொண்டே மலைக்கோவிலுக்கு சென்றும், காவடிகள் எடுத்தும் மலைக்கோவிலுக்கு சென்றனர். அதேபோல பொது தரிசனம், சிறப்பு கட்டண வழிகளிலும் ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags :