கள்ளக்காதலியின் கணவன் வெட்டிக் கொலை

by Staff / 12-08-2023 02:35:45pm
கள்ளக்காதலியின் கணவன் வெட்டிக் கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (45). எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சௌந்தரவல்லி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். செளந்தரவல்லிக்கு ராதாகிருஷ்ணன் (52) என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்த விஷயம் சரவணனுக்கு தெரிய வர, சௌந்தரவல்லியையும், ராதாகிருஷ்ணனையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சரவணன் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். ராதாகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via