பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி

by Staff / 12-08-2023 04:13:35pm
பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை சிம்லா செல்லும் வழியில் மண்டி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழுதடைந்த சாலையால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் உயரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. முன்னதாக மழையால் மூடப்பட்டிருந்த சிம்லா-கல்கா சாலையில் வாகனங்களுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது நடந்துள்ள விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via