துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் ரூ.14 லட்சம் கொள்ளை

by Staff / 12-08-2023 05:13:25pm
துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் ரூ.14 லட்சம் கொள்ளை

குஜராத்தில் 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் சூரத் கிளையில் காலை 11 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பைக்கில் கொள்ளையர்கள் வந்துள்ளனர். வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் கையில் துப்பாக்கியுடன் பிணைக் கைதிகளாக பிடித்தார். ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் முன், கவுண்டர்களில் இருந்த பணத்தை பைகளில் நிரப்பிவிட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது. கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via