தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளி அருகே சப்-இன்ஸ்பெக்டர் அய்யனன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூமாப்பட்டி மேலத்தெரு ராமசாமிபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் (வயது 31) என்பவர் சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரை போலீசார் சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுந்தரராஜ் வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :