மின்சாரம் தாக்கி விவசாயி பலி

by Editor / 18-06-2025 03:04:08pm
மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி. போலீஸார் விசாரணை.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள சேது நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பிற்குச் சென்றார். அப்போது அங்குள்ள மின் மோட்டார் அறையில் மின்சாரம் இல்லை. அதனைச் சரிசெய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via