மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் ஒருநாள் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
Tags :