6 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவருக்கு சிறை

by Staff / 05-06-2023 05:13:22pm
6 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவருக்கு சிறை

பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகில் நேற்று, வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலத்துடன் நின்றுள்ளார்.இதுகுறித்த தகவலின்படி சென்ற, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம், 6. 5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. விசாரணையில் அவர் நாகப்பட்டினம், தீத்தகுடியைச் சேர்ந்த கபிலன், 25, என தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via