நாங்குநேரி சம்பவம்: அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff / 17-08-2023 02:05:34pm
நாங்குநேரி சம்பவம்: அறிக்கை சமர்ப்பிப்பு

நெல்லை நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவர் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அரிவாள் வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர் இதே பள்ளியில் படிப்பது சாத்தியமற்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது சகோதரியை வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு நேரிட்ட சாதிய கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via