மதுபோதையில் மனைவி குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்துகொலை செய்த மனைவி கைது

by Staff / 14-07-2024 04:44:50pm
மதுபோதையில் மனைவி குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய கணவனை சப்பாத்தி கட்டையால் அடித்துகொலை செய்த மனைவி கைது

மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த கார்த்திக்(36) என்பவரை அவரது மனைவி கனிமொழி இன்று அரிவாள்மனையால் வெட்டியும், சப்பாத்திகட்டையால் அடித்தும் கொலை  செய்த நிலையில் கீரைத்துறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை.கார்த்திக்கிற்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கார்த்திக் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுஅருந்திவிட்டு அவ்வப்போது மனைவி கனிமொழியையும், குழந்தைகளும் அடித்து துன்புறுத்திவந்துள்ளார்- இதனால் ஆத்திரமடைந்து மனைவி கனிமொழி இன்று மதுபோதையில் துன்புறுத்தலில் ஈடுபட்ட கார்த்திக்கை மனைவி கனிமொழி அரிவாள்மனை, சப்பாத்திக்கட்டை, தோசை சட்டியால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம்

 

Tags :

Share via