பெங்களூரு இஸ்ரோவுக்கு செல்லும் பிரதமர் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா திரும்புகிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பெங்களூரு சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) அலுவலகத்தை அடைந்து சந்திரயான்-3 குழுவை நேரில் சந்திக்கிறார். இந்த நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பின்னர், பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.
Tags :