இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை! - எடியூரப்பா
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான பி.ஏ.எஸ். எடியூரப்பா தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனக்கு இப்போது 80 வயதாகிறது, என்னால் இனி போட்டியிட முடியாது. 2024 தேர்தலில் கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். மத்தியில் மோடியை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதே எனது இலக்கு என்றார்.
Tags :