சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

by Staff / 25-08-2023 12:43:38pm
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை அரசுப்பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சஸ்பென்டாகி தலைமறைவாக இருந்த இயற்பியல் ஆசிரியர் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அருள்ஜீவன் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் தந்தை புகார் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.

 

Tags :

Share via