மும்பை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ரூ.153 கோடி நிதி
நாட்டில் புகழ்பெற்ற மும்பை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.153 கோடி நன்கொடை அளித்துள்ளார். சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் புவி வெப்பமடைதலைத் தீர்ப்பதில் பங்களிக்கக் கோரி மும்பை ஐஐடி-க்கு இந்த நன்கொடையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இயக்குனர் பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரி, அவரது விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதால், அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றார். பசுமை ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்காக இந்தத் தொகை செலவிடப்படும்.
Tags :