கேரளா, தமிழகத்தில் உற்சாகமாக ஓணம் கொண்டாட்டம்
ஆண்டுதோறும் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் கொண்டாடும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை போல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிகப் பெரிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீட்டு முன்பு அத்தப் பூ கோலம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினர். தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Tags :