தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தற்கொலை

by Staff / 07-09-2023 05:21:15pm
தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தற்கொலை

கோவை மாவட்டம், துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியை சேர்ந்தவர் ராஜன் இவரது மகன் 24 வயதான மனோஜ் குமார், இவர் செட்டிபாளையத்தில்உள்ள தனியார் கல்லூரியில் பி. எஸ்.
சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்,இவரது தம்பி கடந்த 2 ஆண்டுகளுக்கு
முன்பு சாலை விபத்தில் இறந்தார், அதிலிருந்து மனோஜ்குமார் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டு வந்துள்ளார், இந்த நிலையில், தனது அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் விரக்தி அடைந்தவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்னர் இது குறித்து அவரது தந்தை ராஜன் நேற்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via