உசிலம்பட்டியில் அண்ணாமலைக்கு பிரம்மாண்ட வரவேற்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் பாதயாத்திரை உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் நடை பயணத்தை மேற்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி. கே. மூக்கையாதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவருக்கு பாஜக கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பின்பு மேடையில் பேசிய உசிலம்பட்டியில் வீரம் விளைந்த மண்ணில் எனக்கு பேச வேண்டும் என ஆசை உசிலம்பட்டி மக்கள் வெள்ளைக்காரனுக்கும் சரி போலீஸ்காரர்களுக்கும் சரி பயப்பட மாட்டார்கள் சத்தியத்திற்கும் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவார்கள் இன்று தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதானத்தை பற்றி பேசுகிறார். ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தமிழகத்தில் இப்போது இருந்தால் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசி இருக்க மாட்டார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் முக்கிய கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags :