மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து - 55 பேர் காயம்

by Staff / 10-09-2023 12:54:29pm
மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து - 55 பேர் காயம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் சின்ச்பாடா - வாடா சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணித்தனர். இந்த நிலையில் எதிர்த்திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 55 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via