விஷப்பூச்சிகள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 10-09-2023 01:01:05pm
விஷப்பூச்சிகள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் ஐயனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த அரச மரத்தில் இருந்து விஷப்பூச்சிகள் பக்தர்களை கடித்துள்ளது. இதில் இதில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பூச்சி கடித்ததில் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சம்பவம் நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via