சந்திரபாபு நாயுடு கைது ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு.

by Editor / 10-09-2023 11:39:05pm
சந்திரபாபு நாயுடு கைது ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு.

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.371 கோடி முறைகேடு செய்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரும் 22ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து பேரணி, கூட்டம் சேர்த்தல் ஆகியவற்றிற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சந்திரபாபு நாயுடு கைது

Share via