கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு என்னை வெட்டி கூறு போட்டாலும் எதற்கும் தயார்- தனபால் பேட்டி.

by Staff / 14-09-2023 05:20:50pm
கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு என்னை வெட்டி கூறு போட்டாலும் எதற்கும் தயார்- தனபால் பேட்டி.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள CBCID அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராக வருகை புரிந்தார்அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், CBCID அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு சம்மன் அனுப்பினார்கள் என்றும் அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன் என்றும் கூறினார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக ஐஜி சுதாகர் தலைமையில் ஏற்கனவே விசாரணை நடந்தது எனவும் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். எனது தம்பி ஏற்கனவே எல்லாம் சொல்லியுள்ளார் என தெரிவித்த அவர், கோடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது? என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார் என்றார். அதனை CBCID அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன் எனவும் கூறினார்.கோடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். மாற்றுக்கட்சியினர் இல்லை எனவும் ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர் என்றார்.
 

 

Tags :

Share via